கப்டன் லோலோ

கப்டன் லோலோ

அந்த அதிகாலைப் பொழுது புலந்தும் புலராத வைகறை பொழுதில் மேஜர் சுபாசும் கப்டன் நேருவும் எனது மருமகனின் மூலம் அந்த வீரச்சாவு செய்தியைச் சொல்லி அனுப்பினார்கள் லோலோ இறந்துவிட்டார் என்ற செய்தி எம்மை கண்கலங்க வைத்தது இராணுவக் கெடுபிடிகள் தேடுதல் வேட்டைகள் அன்றைய தினம் மிகவும் கடுமையாக இருந்தது எப்படியாவது லோலோ வீட்டாரை அழைத்துவரவேண்டும் என்பதே மேஜர் சுபாசின் அன்புக்கட்டளை அவரது ஆலோசனைப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன சனசந்தடி இல்லாத அந்த குக்கிராமத்தில் துரித கெதியில் நடந்தேறிய லோலோவின் மரணச் சடங்கில் யானும் பங்கு பற்றினேன் இவன் எங்கள் இல்லங்களில் நீட்டி நிமிர்ந்து துயிலும்போது எப்படி இருப்பானோ அப்படியே கண் மூடி மீளாத் துயில் கொண்டிருந்தான்.; அவனது மீளாத்துயில் தந்த மீளாத்  துயரின் சோக ரேகைகள் எங்கள்; நெஞ்சில் கோடுகளாக விழ அவனை என் நெஞ்சில் நிறுத்தி என் நினைவுகளை பின்னோக்கிப் பார்க்கி;றேன்.


பாசறைப் பிரவேசம் 
இவன்; சிறு வயது முதலே விடுதலைப்புலிகள் இயக்கத்தின்; நடவடிக்கைகளோடு ஈடுபாடு கொண்டவனாக இருந்தான் மறைந்த லெப்.வாசன், கப்டன் றொபின் போன்றோர் இவனது ஆர்வத்திற்கு ஊக்கமளித்தனர் கப்டன் றங்கன் இவனுக்கு வழிகாட்டியானான்.
 வாசனின் அம்மாவும் குஞ்சி அன்ரியும்; உறுதுணையாயினர் இவரை நான்  1983ல் சந்தித்தேன் 1983-1984 ஆம் ஆண்டு காலகட்டம் ஒரு நாள்
 'மாட்டு வண்டியைப் பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையைக் கூட்டிக்கிட்டு காட்டு வழி போறவளே....' இப்படிப் பாடிக் கொண்டு ஒரு நாள் ஒரு வண்டியில் வந்தான் கட்டபொம்மன் பாட்டைப் பாடிக் கொண்டு வந்த லோலோவுக்கு அப்போது வயது ஒரு பதின் நான்கு இருக்கும். இந்தப் பாடலை இவன் பாடக்கேட்ட மறைந்த மேஜர் சலாம்; (வல்வெட்டித்துறை) நகைச்சுவையாகச் சொன்னார் 'இவனுக்கு அண்ணை தான் ஒரு கட்டப்பொம்மன் என்ற நினைப்பு' பாஞ்சாலங்குறிச்சியை ஆக்கிரமித்த அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கு பெரும் தலையிடியாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் போல இந்திய ஆக்கிரமிப்பு படையினருக்கு சிம்ம சொற்பனமாக லோலோ விளங்கினான். வலிகாமம் மேற்கில் மேஜர்  வலி-வடக்கிலும் கிழக்கிலும் லோலோவும் வடமராட்சி பகுதியில் இன்னுமொரு போராளியும் ஏக காலத்தில் குடா நாட்டையே ஒரு கலக்கு கலக்கி இந்தியப் படைகளின் அடிவயிற்றை அடிக்கடி கலக்கிக் கொண்டிருந்தனர். வலிகாமம் வடக்கிலும் கிழக்கிலும் லோலோ ஒரு கட்டபொம்மன்தான்.


 உணவு உற்பத்தி 
1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் பின் எமது போராட்டம் மேலும் கூர்மையடையலாயிற்று அந்தப் போராட்ட வேகத்திற்கு ஏற்ப சுதேசம் உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டது உணவாதாரம் உயரத் திட்டங்கள் முடக்கி விடப்பட்டன உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த தமிழரின் பாரம்பரிய வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பணியில் லோலோவும் முன்னணியில் நின்றான். விடுதலைப் புலிகளில் ஒவ்வொரு பணியிலும் பங்கேற்றான். மக்கள் முன்னணி தலைவர்களின் நெறிப்படுத்தலிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவன். இவன் அண்ணன் பால் இவனுக்கு பெருமதிப்பு அண்ணனுக்கு இவன் மீது அலாதி அன்பு.


 களத்தில் லோலோ 
முறையாக இராணுவப் பயிற்சி பெற்றுக் கொண்ட லோலோ சிறீலங்கா இராணுவத்துடனான பல மோதல்களில் பங்கேற்றான் குடா நாட்டிற்குள் இருந்த பெரிய இராணுவ விமானப்படை கூட்டு முகாமிலிருந்து இராணுவம் பல தடவைகள் வானுறைகளில் உதவியுடன் குடியிருப்புகளை நோக்கி வானூர்திகளின் உதவியுடன் குடியிருப்புக்களை நோக்கி வெளியேற முற்பட்டபோது எல்லாம் இவன் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டான். கப்டன் றங்கன் இவனுக்கு வலக்கரமாக நின்று பல களங்களில் பொரிட்டான்.
 1987 ஜூலை மாதம் ஐந்தாம் திகதி நெல்லியடி மத்திய கல்லூரி முகாம் மீது 'கப்டன் மில்லர் மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில்' தன்னையே முழுமையாக அர்ப்பணித்து தியாக மரணம் அடைந்தான். அந்த தாக்குதலிலும் லோலோ பங்கேற்றான். அங்கிருந்த சிங்களச் சிப்பாய்  ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றிய லோலோ அதனை ஈழமுரசில் ஒப்படைத்து பிரசுரிக்கச் செய்தான் அந்த சிங்கள சிப்பாய் யாழ்ப்பாணத்தில் மனம் புளுங்கியபடி வாழும் தனது அவல வாழ்வை அதில் சித்தரித்து இருந்தான் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயினதும் மனோநிலையை அக்கடிதம் படம்பிடித்துக் காட்டியது.
 இந்தியப் படைகளுடன் நடந்த யுத்தம் 
1987 ஆம் ஆண்டு; அமைதிகாக்கும் படை என்ற புனை பெயரில் ஈழத்திற்குள் நுழைந்த இந்திய இராணுவம் விடுதலைப் புலிகள் மீது போர் தொடுத்தது,கோப்பாய், ஊரெழு, உரும்பிராய், இராஜ வீதி, நீர்வேலி போன்ற பல இடங்களில் இடம்பெற்ற யுத்தங்களில் எல்லாம் லோலோ பங்கேற்றான் இடைக்கிடை இரவில் வந்து எம்மை சந்திக்கும் லோலோ முற்றிலும் தமக்குப் பழக்கப்படாத பிரதேசமொன்றில் கெரில்லாப்; போர்முனையில் பயிற்சி பெறாத இந்திய படை யினர்களின் பலவீனங்களையெல்லாம் தாம் புரிந்து கொண்டு மிகவும் தந்திரமாக ஆயுதங்களைக் கைப்பற்றியமை பற்றி எடுத்துரைத்து அங்கிருந்தோர்களுக்கெல்லாம்  நம்பிக்கை ஊட்டினான்.


 கிளிநொச்சியில் தப்புதல்
ஒரு முறை கிளிநொச்சிக்கு சென்ற லோலோவை கிளிநொச்சி பொலீசாருக்கு தேசத்துரோகிகள் காட்டி கொடுத்தனர் கைதான லோலோ தேசத்துரோகிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் பாச்சா காட்டிவிட்டு தப்பி வந்தான் அங்கிருந்த தப்புவதற்கு அவன் கையாண்ட தந்திரோபாயங்கள்; அவனை ஒரு முழுமையாக கெரில்லா வீரனாகவே எமக்கு இனம் காட்டியது.


 வலிகாமத்தில் லோலோ 
இந்திய இராணுவம் எமது தாயக பூமியை ஆக்கிரமித்த நாட்கள் தொடக்கம் லோலோ இறக்கும் வரை வலிகாமல் பிரதேசத்தில் இவனது பெயரை கேட்டாலே இந்திய இராணுவம் அஞ்சி நடுங்கியது. இவன் அடிக்கடி உலாவிய பகுதிகள் பல தடவைகள் பெரும் தொகையான இந்தியச் சிப்பாய்களால் சுற்றி வளைக்கப்பட்டு சல்லடை போட்டு தேடப்பட்டன. ஒரு முறை ஒரு பிரதேசத்தில் லோலோ தங்கியிருந்த செய்தியை கேள்விப்பட்ட இந்திய இராணுவம் அப்பகுதியை சுற்றி வளைத்துக் கொண்டது லோலோவைக் குறிவைத்தே அந்த சுற்றி வளைப்பு, ஒவ்வொரு வீடாக லோலோவின் பெயரைக் குறிப்பிட்டு இந்திய இராணுவம் தேடிக்கொண்டு இருந்தனர் சுன்னாகத்திலிருந்து, மல்லாகம் ஊடாக தெல்லிப்பளை வரை கே.கே.எஸ் வீதியிலும் மறுபகுதி பகுதி அச்சுவேலி, ஆவரங்கால், புத்தூர், நீர்வேலி வரையான பருத்தித்துறை வீதிவரை ஒரு பெரிய பிரதேசம் ஒரு நாள் அதிகாலை தொடக்கம் மாலை வரை தேடப்பட்டது ஒரு 'ரீ' சேட்டும் கட்டைக் காற்சட்டையும் கையில் ஒரு புத்தகக் கட்டுடன் துவிச்சக்கரவண்டி ஒன்றில் ரியூசன் மாணவனைப்போல ஒழுங்கைகளினூடாக சென்றுகொண்டிருந்தான் அந்த முற்றுகையை புத்திசாதுரியமாக முறியடித்து வெளியேறுவதே அவனது நோக்கம் பிரதான வீதியை வந்தடைந்த சிப்பாய்களை நெருங்கிய லோலோ 'நமஸ்தேஜி' என்று இந்திய மொழியில் சொன்னான் பதிலுக்கு நமஸ்தேஜி சொன்ன இராணுவம் 'சலோ சலோ' (விரைந்து போ) என்று கூறி அவனை வழி அனுப்பி வைத்தனர் அன்று லோலோவைப் பார்த்தபோது அவன் அசல் பள்ளிக்கூட மாணவனைப் போலவே இருந்தான் இந்திய துருப்புக்களை அவன் ஏமாற்றியது எல்லோருக்கும் வியப்பைக் கொடுத்தது.


 பகிஷ்கருப்பு பிரசாரம் 
மட்டக்களப்பில் ஒரு மாத காலமாக உண்ணா நோன்பிருந்த அன்னை பூபதி கணபதிப்பிள்ளை  1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தியாக மரணம் அடைந்தார் இதனால் விடுதலைப்புலிகள், மக்களுக்காக மரணித்து அந்த மாபெரும் அன்னைக்காக தமிழ் ஈழத்தில் துக்க தினம், கர்த்தால், பாடசாலை பகிஸ்கரிப்பு, கடைஅடைப்பு என பல் முனைப் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர் அன்னை பூபதியின் மரணத்தால் கிலேசமடைந்த இந்திய இராணுவம் பரிஷ்கரிப்பையும் கர்த்தாலையும் முறியடிக்க முனைந்து நின்றது. ஒவ்வொரு முகாமிலுமிருந்து இராணுவக் கொமாண்டர்கள் அந்தப் பகுதி பாடசாலைகளுக்கு சென்று பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளைப் பகிஸ்கரிக்கக்கூடாது என மிரட்டிக்கொண்டு திரிந்தனர்
வலிகாமம்; பகுதியில் ஒரு பாடசாலைக்குள் அப்போதுதான் பகிஸ்கரிப்புக்காக ஆதரவு திரட்டச் சென்ற லோலோ வகுப்பறை ஒன்றுக்குள் நுழைந்து பாடசாலைச் சிறுவன்போல் நின்றுகொண்டிருந்தான் லோலோ இருந்த அதே வகுப்பறைக்கு இராணுவ அதிகாரியான மேஜர் கே.பி தாஸ் நுழைந்து மாணவர்களுக்கு போதனைகள் புரிந்தார் மாணவர்களுள் ஒருவனாக  வாங்கிலில் இருந்து யாவற்றையும் செயி மடித்த லோலோ அவர்கள் போன பின் பகிஸ்கரிப்பின் அவசியத்தை ஒரு குட்டி பிரசங்கமே ஆற்றிவிட்டு அடுத்த பாடசாலையை நோக்கி தனது துவிச்சக்கரவண்டியில் ஏறி; நகர்ந்தான் அவன் சென்ற பாடசாலைகள் எல்லாம் கர்த்தால் தினத்தன்று மாணவர்களால்  பகிஸ்கரிக்கப்பட்டடு வெறிச்சோடிக்கிடந்தன.
கே.கே.எஸ் தாக்குதல் 


ஒரு நாள் காங்கேசன்துறை நகரத்தில் நின்ற லோலோ ஒரு கடைக்கு முன்னால் நின்ற மூன்று இராணுவத்தினர் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுத்தான் அதில் ஒரு இராணுவச் சிப்பாய் அந்த இடத்திலேயே இறந்தான். காயப்பட்டு நிலத்தில் விழுந்த இன்னொரு  சிப்பாய்  தனது துப்பாக்கியிலிருந்த தோட்டாக்கள் தீரும்வரை கிழக்கு நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தான் அவனுக்கு மேற்குப் பக்கத்தில் நின்ற லோலோ ஒரு மதிலுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு நிலைமையை அவதானித்துக் கொண்டிருந்தான் இதற்கி டையில் இந்தச் சூட்டுச்சத்தம் அமளி துமளியில் தூரத்தில் தென்னம் தோட்டம் ஒன்றில் சென்றிக்கு நின்ற சிப்பாய்கள் தமது முகாமுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் யுத்தம் போல் மின்னல் வேகத்தில் இடம்பெற்றபோது ஒரு கடை முதலாளி  கடையைப்பூட்டாமல் தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்ற நிலையில் தப்பியோடிவிட்டார். சிறிதுநேரம் அமளிக்குப்பின் அமைதியைப்பயன்படுத்திக்கொண்டு  இறந்த சிப்பாய்களில் கையில் கிடந்த ஆயுதங்களைக் கைப்பற்றும் நோக்குடன் கொஞ்சமேனும் பதட்டமில்லாமல் அந்த இடத்திற்கு மீண்டும் லோலோ வந்துபார்த்தான். கடை முதலாளி ஒருவர் ஓடித்தப்பிய கடைக்குள் இருந்த மேசை லாச்சியைத்திறந்து அங்கிருந்த பணநோட்டுக்களை மிக அமைதியாக ஒரு சீக்கியச் சிப்பாய் எண்ணிக்கொண்டிருந்தான். லோலோவைக் கண்ட அவன் லோலோமீது தாக்குதல் தொடுக்க முனைந்தான் அதற்குள் மின்னல் வேகத்தில் லோலோவின் துப்பாக்கி அவனைக்குறிபார்த்தது ரவைகளைப் பொழிந்து தள்ளியது. ஏல்லோருடைய ஆயுதங்களையும் கைப்பற்றிக்கொண்ட லோலோ தனது துவிச்சக்கரவண்டியில் ஏறி அந்த இடத்தை விட்டு மறைந்தான்.

மீட்டு எடுத்த துவிச்சக்கரவண்டி.

ஒரு நாள் வீதிவழியே வந்துகொண்டிருந்த லோலோவை அடையாளம் கண்டுகொண்ட சில தேசத்துரோகிகள் கொடுத்த தகவலின்பேரில் லோலோ சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியை இந்திய இராணுவத்தின் கவசவாகனங்கள் பின் தொடர்ந்தன ஒரு கெரில்லாப்போராளி எதிரியிடமிருந்து தப்பிக்கொள்ள புவியியல் ரீதியாக அவனுக்கு அனுகூலமான இடம் எங்கே கிடைக்கின்றதோ அந்த சந்தர்ப்பத்தை அவன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். லோலோவுக்கு இப்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அடுத்த கணமே அவன் துவிச்சக்கரவண்டியை அந்த இடத்தில் போட்டுவிட்டு றோட்டின் அருகே இருந்த மதிலைத்தாண்டி தப்பிக் கொண்டான்.கவசவாகனங்களில் வந்தவர்கள்  கவச வாகனங்களில் வந்த இராணுவத்தினர் லோலோவைத் துரத்திக்கொண்டு பின்னால் ஓடினராயினும் அவன் பல தந்திரோபாயங்களைக் கையாண்டு வெகு சாதுரியமாகத் தப்பிக்கொண்டான். ஆத்திரம் கொண்ட இராணுவத்தினர்  சயிக்கிளை தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு முகாமிற்குச் சென்றனர்.
உடனே லோலோ ஒரு பிரஜைகள் குழு தலைவரின் வீட்டிற்குச் சென்றான் அவரிடம் பெரியவரே! எனது சயிக்கிளை இராணுவச்சிப்பாய்கள் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அதை முகாம் அதிகாரியிடம் கதைத்து மீட்டுத்தரவேண்டும் என்றான் அந்த பிரஜைகள் குழுத்தலைவர் தம்பி நீ போட்ட சையிக்கிளை நான்போய்க்கேட்டால் அவர்கள் தருவார்களா?என்றார் பிரஜைகள் குழு என்று இருக்கும் நீங்கள் மாலை நேரத்தில் இராணுவக் கொமாண்டரோடு கூடியிருந்து ரீ குடித்து உல்லாசமாகப் பொழுது போக்கவும் அவர்கள் உங்களிடமிருந்து பேச்சோடு பேச்சாக எங்களைப் பற்றிக் 'கறந்து' எடுத்து எங்களைத்தேடித்திரியவுமோ இருக்கிறீர்கள்? நூன் ஒரு பிளான் தருகிறேன் அதன்படி செய்யுங்கள் என்றான் பெரியவரும் உடன்பட்டார்.நீங்கள் போய் உங்கள் சயிக்கிள் உங்கள் வீட்டு முன்னால் நிறுத்தப்பட்டிருந்தது என்றும்  அதனை லோலோ எடுத்துக்கொண்டு போய்விட்டான் என்றும், போகும் வழியில் அதனைப்பிடித்து உங்கள் முகாமில் வைத்திருப்பதாகவும் அறிகிறேன்  என்றும் கூறி அவர்களிடம் வாங்கி வாருங்கள் என்றான்.லோலோ கொடுத்த திட்டப்படி அந்தப் பெரியவர் செயற்பட்டார். ஒரு சில மணித்துளிகளில் லோலோவின் கைகளுக்கு அவனது  சைக்கிள் வந்து சேர்ந்தது.


சுண்ணாகம் தாக்குதல்.

விடுதலைப் புலிகள் 1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி சுண்ணாகம் ஜெட்மோட்டேர்ஸ் அருகில் முகாமிட்டிருந்த   இந்திய இராணுவத்தினரதும், தேசத்துரோகிகளதும் முகாம்மீது தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர் இத் தாக்குதலில் பங்குபற்றிய லோலோவுக்கு காலில் காயம் ஏற்பட்டது காயப்பட்ட லோலோவை காப்பாற்றிவிடவேண்டும் என்று துடியாய் துடித்த நண்பர்கள் தமது உயிரைப் பொருட்படுத்தாது மிக மோசமான இராணுவக்கெடுபிடிக்கு மத்தியில் ஒரு இரவில் இராணுவ சென்றி முகாம்களையும் ஊடறுத்துக்கொண்டு மோட்டார் வாகனம் ஒன்றில் பிரதான பாதைகளினூடாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் சரியான வைத்திய வசதிகள் கிடையாமல் விதி அவனையும் அவனது நண்பர்களையும் பிரித்து விட்டது.
லோலோவின் மரணச் சடங்கு ஒரு ஒதுக்குப் புறக்கிராமத்தில் ஒரு வீட்டில் நடந்துகொண்டிருந்த அதே வேளையில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான இந்திய இராணுவச் சிப்பாய்கள் இன்னொரு அயற்கிராமத்தைச் சுற்றிவளைத்து வீடு வீடாக லோலோவைத் தேடிக்கொண்டிருந்தனர். அவனோ தனது நண்பர்களில் இராணுவ மரியாதைகளுக்கு மத்தியில் இராணுவ அணிவகுப்புடன் இறுதிப் பயணத்தை மேற்கொண்டிருந்தான்.
இவன் மரணித்த இடமும் யாருக்கும் தெரியாது
இவனை அடக்கம் செய்த இடத்தையும் அவர்கள் சொல்லவில்லை- ஆனால்
இவனோ ஒவ்வொரு அங்குல நிலத்திலும் வாழ்கிறான்.
வீசம் காற்றிலும் வீரர்கள் நெஞ்சிலும் இவனது நினைவாலயம்
நிமிர்ந்து நிற்கின்றது.

நன்றி ஈழநாதம்.(18.03.1990)

இந்திய இராணுவச் சிப்பாய்கள் மட்டுமல்ல இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும் லோலோவின் பெயரைக்கேட்டு கிலேசமடைந்து இருந்தனர். 'லோலோவை நான் ஒருக்கால் பார்க் வேண்டும்' என்பது மேஜர் ஒப்றோயின் ஆசை 'லோலோ எப்படியான தோற்றமுடையவன்' இது மேஜர் கே.பி தாசின் ஆதங்கம். 'லோலோ இந்தப் பிராந்தியம் எங்கும்; ஒரே தொல்லையாய் இருக்கிறான்' இது பிரிகேடியர் மனோரஞ்சிங் ஆத்திரம். 'லோலோ போட்டதுதான் எங்கும் சட்டமாக இருக்கிறது' இது இராணுவ அதிகாரி ரவி நாயரின் ஏக்கப் பெரு மூச்சு.
ஒரு வீட்டில் லோலோ தங்கியிருந்த வேளை அந்த வீட்டிற்கு திடீரென வந்த கேணல் பர்பார்சிங் கிடம் தானே அந்த வீட்டு வேலைக்காரன் என்று சொல்லி தப்பிக்கொண்டான். பாடசாலைப்பிள்ளைகள் தமது மதிய உணவை  எடுத்துச்செல்வதைக் கண்ட மேஜர் ஜெனரல் சந்தோஸ்பாண்டே பாடசாலைச் சிறுவர்களிடம் என்ன லோலோவுக்கு சாப்பாடு கொண்டு போகிறீர்களா? ஏன்று கேட்டு மிரட்டினார்.