தாயக விடிவிற்காய் தனது இரு பிள்ளைகளை மாவீரர்களா அற்பணித்த தந்தை

தாயக  விடிவிற்காய் தனது இரு  பிள்ளைகளை  மாவீரர்களா  அற்பணித்த தந்தை
'போராளி வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்களின் தியாகத்தை 
நினைவு கூறுகின்றோம்.'
யாழ் இளவாலையைப் பிறப்பிடமாகவும், வன்னி நிலப்பரப்பு கைவேலியை தற்காலிக வதிவிடமாகவும்,தற்போது யேர்மனியில் வசித்து வந்தவருமான திரு.வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்கள், 03.02.2025 செவ்வாய்க்கிழமை அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்தார்.   
   அன்னார்   எம் தாயக  விடிவிற்காய் தனது இரு  பிள்ளைகளை  மாவீரர்களா 
அற்பணித்த தந்தையுமாவார். வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்கள், 1990ஆம் ஆண்டு தொடக்கம்   எமது   இயக்கத்தின்,  புலனாய்வுத்துறையில்,  சேவையாளராக   இணைந்து,
பல்வேறு பணிகளிலும் மிகவும் சிறப்புடனும் செயல்திறனோடும் செயலாற்றி,எமது விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு அயராது  பங்காற்றியிருந்தார், 2002ஆம் ஆண்டு   காலப்பகுதியில் இயக்கத்தின் அனுமதி பெற்று மனைவியோடு யேர்மன் வந்து,தன் மகளோடு சில காலம் தங்கி வாழ்ந்த ஐயா சிவநாதன் மீண்டும் தாயகம் திரும்பிய நிலையில்,    தமிழீழ   விடுதலைப்   புலிகளில்    தன்னை   முழுநேரமாக    உறுப்பினராக 
இணைத்து,    கணினிப்     பிரிவில்     போராளியாக     மறைமலை    என்ற    பெயரில் 
செயல்பட்டார்.2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில்,தனது துணைவியாரை இழந்ததோடு, இறுதிக்களம்வரை அந்த  மண்ணில்  நின்ற   ஒரு   போராளியுமாவார்.   இவரின்   இழப்பு 
எம்மினத்திற்கு ஒரு பேரிழப்பாகும். இவரில் இழப்பால் மீளாத்துயரில் வாடிநிற்கும் இவரின் குடும்பத்தினருக்கு   எமது  ஆழ்ந்த  அனுதாபங்களைத்   தெரிவிப்பதோடு,  மீளாத்  துயில் 
கொள்ளும் இவருக்கு எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.